பயிற்சிகள் பிப்ரவரி 2020
பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் அமைந்துள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் வருகின்ற 5ம் தேதி கறவை மாடு வளர்ப்பு மற்றும் தீவன மேலாண்மை தொடர்பாக 1 நாள் இலவச பயிற்சி நடைபெறும் என மையத்தின் முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான முனைவர் வே.எ. நேதாஜி தெரிவித்தார்.
இப்பயிற்சியில், கறவை மாடு வளர்ப்பு, தீவன மேலாண்மை, நோய் மற்றும் ஒட்டுண்ணி நிர்வாகம் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்படும். இப் பயிற்சியில் பங்கேற்க விருப்பமுடையவர்கள் 88839 57219, 70108 82431 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தங்களது பெயரை முன் பதிவு செய்யலாம். பயிற்சியானது காலை 10 மணிக்கு தொடங்கும். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்பதால் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம் சார்பில், மாடித்தோட்டம் அமைத்தல் தொடர்பாக ஒருநாள் பயிற்சி வகுப்பு பிப்ரவரி 6ம் தேதி கிண்டியில் நடைபெறவுள்ளது.
இது குறித்து அந்த மையத்தின் தலைவர் எச்.கோபால் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சுய வேலைவாய்ப்பு, புதிய தொழில் முனைவோரை உருவாக்கும் நோக்கில், சென்னை கிண்டியில் செயல்படும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தகவல், பயிற்சி மையத்தின் சார்பில் பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், மாடித்தோட்டம் அமைத்தல் தொடர்பாக ஒரு நாள் பயிற்சி வகுப்பு பிப்ரவரி 6ம்தேதி கிண்டியில் நடைபெறவுள்ளது. இதுபோல, மட்கும் உரம் தயாரிப்பு தொழில்நுட்பங்கள் தொடர்பாக ஒரு நாள் பயிற்சி பிப்ரவரி 5ம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த பயிற்சியானது, நகரவாசிகள், மகளிர், மாணவர்கள், சுய உதவிக்குழுக்கள், இளைஞர்கள், தொழில்முனைவோர் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் நல்ல வாய்ப்பாக அமையும். இந்தப் பயிற்சி வகுப்பு காலை 10 மணி முதல் பிற்பகல் 3.30 வரை நடைபெறுகிறது. பயிற்சி பற்றிய குறிப்பேடு, கையேடு, மதிய உணவு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். ஒருநாள் பயிற்சிக்கான கட்டணம் ரூ.650.
இப் பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் 044-22250511 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம், முதல்தளம், சிப்பெட் எதிரில், கிண்டி, சென்னை – 600 032 என்ற முகவரியில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
திருச்சியில் வருகின்ற 6, 7ம் தேதிகளில் இலவச ஆடு வளர்ப்புப் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் கால்நடை பல்கலைக் கழக பயிற்சி மையத்தில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.
திருச்சி கொட்டப்பட்டு, கோழிப்பண்ணை சாலையில் இயங்கி வரும் கால்நடைப் பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வருகி்ன்ற 6, 7 ஆகிய தேதிகளில் இலவச ஆடு வளர்ப்புப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. விருப்பமுள்ளோர் கால்நடை பல்கலைக் கழக ஆராய்ச்சி மையத்தை 0431-2331715 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். இல்லையெனில் பயிற்சி வகுப்பும் தொடங்கும் நாளான பிப். 6ம் தேதி காலை 10 மணிக்கு நேரில் வருகை தந்தும் பங்கேற்கலாம் என பேராசிரியரும், மையத்தலைவருமான பி.என். ரிச்சர்டு ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம் சார்பில், காளான் வளர்ப்பு தொடர்பாக ஒருநாள் பயிற்சி வகுப்பு பிப்ரவரி 13-ஆம் தேதி கிண்டியில் நடைபெறவுள்ளது.
இது குறித்து அம்மையத்தின் தலைவர் எச்.கோபால் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : சுய வேலைவாய்ப்பு மற்றும் புதிய தொழில்முனைவோரை உருவாக்கும் நோக்கில், சென்னை கிண்டியில் செயல்படும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தின் சார்பில் பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், சிறுதானிய உணவுகள் தயாரிப்பு தொடர்பாக ஒரு நாள் பயிற்சி வகுப்பு, பிப்ரவரி 12-ஆம் தேதி கிண்டியில் நடைபெறுகிறது. இதுபோல, காளான் வளர்ப்பு தொடர்பாக ஒருநாள் பயிற்சி வகுப்பு பிப்ரவரி 13-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்தப் பயிற்சியில் நகரவாசிகள், மகளிர், மாணவர்கள், சுய உதவிக் குழுக்கள், இளைஞர்கள், தொழில்முனைவோர் மற்றும் அனைத்துத் தரப்பினருக்கும் பங்கேற்கலாம். ஒருநாள் பயிற்சிக்கான கட்டணம் ரூ.650. இந்தப் பயிற்சி வகுப்பு காலை 10 மணி முதல் மாலை 3.30 வரை நடைபெறுகிறது. பயிற்சி பற்றிய குறிப்பேடு, கையேடு, மதிய உணவு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 044-22250511 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம், முதல்தளம், சிப்பெட் எதிரில், கிண்டி, சென்னை 600 032 என்ற முகவரியில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி பெற அழைப்பு
பெரம்பலூர் கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பிப். 20, 21 ஆம் தேதிகளில் நடைபெறும் நாட்டுக்கோழி வளர்ப்பு தொடர்பான இலவசப் பயிற்சி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர்- செங்குணம் பிரிவு சாலை எதிரேயுள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில், நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் வரும் 20 மற்றும் 21ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில், நாட்டுக்கோழி இனங்கள் மற்றும் இனப்பெருக்க மேலாண்மை, வளர்க்கும் முறைகள், தீவன மேலாண்மை, கொட்டகை அமைக்கும் முறை, குஞ்சுகள் பராமரிக்கும் முறை மற்றும் நோய்த் தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் ஆராய்ச்சி மையத்தை நேரிலோ அல்லது 93853 07022 எனும் எண்களிலோ தொடர்பு கொண்டு தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்